திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 1,500 மாணவ மாணவியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

மினுவாங்கொடை நிருபர் 
  திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 1,500 மாணவ மாணவியர்கள்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணின் புதல்வி கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே, இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி, மேற்படி பாடசாலையில் சாதாரண தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.