இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இன்று வீடு திரும்பினர்

இராணுவத்தினரின் கண்காணிப்பின் கீழ், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 309 பேர் இன்று (27) வீடுகளுக்கு திரும்பவுள்ளனரென, இராணுவம் தெரிவித்துள்ளது.

இவர்கள் தியத்தலாவையிலுள்ள 4 தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே இவ்வாறு தியத்தலாவை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.