அக்கரைப்பற்று முனவ்வறா ஜுனியர் கால்லூரியின் வித்தியாரம்பம்

 

 

தேசிய ரீதியில் அரசாங்கப் பாடசாலைகளில் 2020க்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச பாடசாலைகளிலும்  விமர்சையாக இடம்பெற்றன .

இதனடிப்படையில் அக்கரைப்பற்று முனவ்வரா ஜுனியர் கல்லூரியிலும் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ் ஷேய்க் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் , கௌரவ அதிதிகளாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.பாஸ்மில் ,
மற்றும் கோட்டைக்கல்வி அதிகாரியான எம்.ஏ.கலீலுர் ரஹ்மான் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

 

இக்கல்லூரிக்கு கடந்த வருடம் அக்கரைப்பற்று வலயத்துக்குக் கிடைக்கப்பெற்ற 7 ஏழு தேசிய விருதுகளில் 5 ஐந்து விருதுகள் இக்கல்லுரிக்கு கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும் .