ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது : தயாசிறி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பிலான விபரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொலைச் சதித் திட்டம் பற்றிய முக்கிய விடயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விரைவில் இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலைச் சதித் திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி (சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்) நாலடி சில்வா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.