புதிய பிரதமருக்கு ஐ.தே.கட்சியின் அமைச்சர்கள் சிலர் ஆதரவு வழங்கவுள்ளனர் – எஸ்.பி.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆதரவு வழங்கி அரசாங்கத்தை முன்னெடுக்க உதவி வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவினரே இவ்வாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.