“ஜனபலய கொலம்பட்ட” மக்கள் சூழ்ந்து கொண்டதால் அசைய முடியாமல் தடுமாறிய மஹிந்த

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்ட இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வருகைத்தந்துள்ளார்.“ஜனபலய கொலம்பட்ட” என்ற போராட்டம் கொழும்பின் பல பாகங்களில் இருந்தும் இன்று மதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கொழும்பு – கோட்டை, போஹா சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டக்களத்திற்கு சற்றுமுன்னர் மஹிந்த பலத்த பாதுகாப்புடன் வருகைத்தந்துள்ளார்.விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வந்து இறங்கிய மஹிந்தவை மக்கள் சூழ்ந்து கொண்டதுடன், அசைய முடியாமல் மஹிந்த தடுமாறியுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை அழைத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி தற்போது மஹிந்தவின் பங்குபற்றுதலுடன் மாபெரும் பேரணி புறப்பட்டுள்ளது.