முகா தலைவர் – எனக்கு அறைந்தார் என்பது உண்மைக்கு முரனானது. அவ்வாறு அறைபடுவதற்கு நான் என்ன முட்டாளா?

 

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

முகா தலைவர் – எனக்கு அறைந்தார் என்பது உண்மைக்கு முரனானது. அவ்வாறு அறைபடுவதற்கு நான் என்ன முட்டாளா? அறைந்திருந்தால் மாறி அறைந்திருப்பேன் எனக் கூறுகின்றார் அண்மையில் தாருஸ்ஸலாமில் அறை வாங்கியதாக கூறப்படும் முகா எம்பி.

இது குறித்த எம்பி தரப்பினரின் ஆவேசம். ஆனால் முகா தலைவர் தரப்பு இப்படிக் கூறுகின்றது.

தலைவர் ஹக்கீம் அந்த எம்பியை அழைத்து – எம்பி பதவியை இராஜினாமா செய்யுமாறு கூறினார்.

அதற்கு அந்த எம்பி , யாருக்கு வழங்கப்போகின்றீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தலைவர்- ஹாபிஸ் நஸீருக்கு வழங்கப்போகின்றேன் என்றார்.

நீங்கள் யாருக்கு வழங்கினாலும் பிரச்சினையில்லை.நான் இராஜினாமா செய்யமாட்டேன் என்றார் அந்த எம்பி. நீங்கள் எனது ஊருக்கு செய்யும் துரோகம் எனவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைவர்; கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரையும்தான் எம்பி பதவி. அதற்கான அறிவிப்பு வந்தால் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம். பொலநறுவையில் வைத்து நமக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டு விட்டு இப்போது மறுப்பது நியாயமில்லை என்றார்.

பின்னர்,இருவருக்குமிடையில் கருத்து மோதல் உச்சத்தை தொட்டவேளை, திடீரென குறித்த எம்பி – அதாவுள்ளாவுடன் அல்லது றிஷாதுடன் இணைவேன் என்ற போதுதான் தலைவர் – அந்த எம்பிக்கு அறைந்தார். அறைந்தது நூற்றுக்கு நூறு உண்மை என்றனர்.

அம்பாரை மாவட்ட முகா எம்பிக்களில் மற்றொருவர்- தனக்கு மாவட்டத்திலுள்ள மற்றைய மூன்று முகா எம்பிக்களால் சதி மேற்கொள்ளப்படுவதாக தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அரசியலிலிருந்து என்னை துரத்துவதே இவர்களின் இலக்கு என்று ஆதங்கப்பட்டுள்ளார். இது தொடருமாயின் மாற்று கட்சியொன்று தொடர்பில் சிந்திக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த எம்பிக்கு “முயல்” என்றால் ரொம்பப் பிடிக்கும்.