தாமரை மொட்டு கட்சி வெற்று அரசியல் கட்சி, அது எப்போதும் பூக்க போவதில்லை : ஜனாதிபதி

file image
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது வெற்று அரசியல்கட்சி எனவும் அந்த கட்சியின் தாமரை மொட்டு எப்போதும் மலராது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
file image
 மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தாமரை மொட்டு கட்சி வெற்று அரசியல் கட்சி. அது எப்போதும் பூக்க போவதில்லை.ஐக்கிய தேசியக்கட்சியின் பலவீனமான பொருளாதார வேலைத்திட்டம் காரணமாக அரசாங்கம் அதிருப்திக்கு உள்ளானது.
 நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.