ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக மலிக் சமரவிக்ரம அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தீர்மானித்துள்ளார். தமது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசிம் பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

கட்சி மறுசீரமைப்புக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் வகையிலேயே இந்த முடிவை எடுத்திருந்ததாக அமைச்சர் கபீர் ஹாசிம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து அமைச்சர் மலிக் சமரவிக்ரம விலகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.