நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவியில் மாற்றங்கள் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

பிரதமர் பதவியில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

file image

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவியில் மாற்றங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஒன்றை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளனர்.எதிர்வரும் 4ம் திகதி இந்த யோசனை நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.