இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் சாதனை

இலங்கை அணியின் வீரர் தினேஸ் சந்திமால் சாரா ஓவல் மைதானத்தில் மிக அதிக பந்துகளில் சதத்தினை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

 

இவர் பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இன்று 244 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.

குறித்த சதமே சாரா ஓவல் மைதானத்தில் பெறப்பட்ட மிக மெதுவான சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 310 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.