ராஜபக்ஸவினர் ஆட்சியை கைப்பற்றுவதில் தற்போது முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றனர் : பீல்ட் மாஷல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ அரசியலுக்கு வருவதற்கு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யுத்தக் குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அது மட்டும் அல்ல ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றுவதில் தற்போது முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றனர். 

கூட்டு எதிர் கட்சியினால் உருவாக்கப்பட்டுள்ள “பொது ஜன பெரமுன”வின் முதலாவது கூட்டம் நேற்று புரட்சியின் ஆரம்பம் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஸ அரசியலுக்கு வருவதற்கு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா பச்சைகொடி காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.