ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொண்டது; முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றி

மக்களின் உரிமைகளை பாதுகாத்து, இலங்கையில் ஜனநாயகத்த உறுதிப்படுத்துவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் பிரதிபலனாக ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், இது நல்லாட்சி அரசாங்கம் பெற்ற வெற்றி மாத்திரமல்ல எனவும் முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, தைத்த ஆடைகள் உட்பட தேசிய உற்பத்திகள் மூலம் மேலும் விரிவாக ஐரோப்பிய சந்தைகளில் மீண்டும் பிரவேசிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக பல புதிய தொழில் வாய்ப்புகளும் வாழ்வாதார வழிகளும் நாட்டுக்குள் உருவாகும். ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்களும், உதவியவர்கள் என பலர் உள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.