மஹிந்த குறித்து அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் :விக்ரமபாகு

2017ஆம் ஆண்டு அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக தெரிவித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறித்து அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக தெரிவித்து வரும் மஹிந்த ராஜபக்சவை குறைத்து மதிப்பிடக் கூடாது.

மஹிந்த சதித்திட்டம் தீட்டுவதில் கைத்தேர்ந்தவர். எனவே, அவர் குறித்து அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.