முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் பிறந்த தின பரிசாக புதிய அரசியல் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது !

president-mahinda-rajapaksa-celebrates-his-67th-birthdayகூட்டு எதிர்க்கட்சியின் புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி நவம்பர் 18 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிறந்த தினமான நவம்பர் 18 ஆம் திகதி காலை சுபநேரத்தில் அனுரதபுரத்தில் வைத்து கட்சியின் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசாக இந்த கட்சியின் பெயர் அறிவிக்கப்படவிருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ஸ இதுவரை இறுதி தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

எனினும் அவரது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு புதிய முன்னணி ஒரு விரிவான மேடையாக அமையும் என ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.