இலங்கையில் கால்வாய் வலைப்பின்னலின் ஊடாக போக்குவரத்து ஆரம்பம் !

images
கால்வாய் வலைப்பின்னலின் ஊடாக பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

கொழும்பில் 43 கிலோமீற்றர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கால்வாய் மூலமே போக்குவரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக காணி சீர்திருத்த அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை அமைச்சரவையும் வழங்கியுள்ளது.

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கால்வாய்களின் ஊடாக மிதக்கும் சந்தைகளை அமைக்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.