ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
துருக்கி நாட்டில் உள்ள ஆன்டல்யா நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் உச்சி மாநாடு நடந்தது. துருக்கி தலைநகர் அங்காராவில் கடந்த மாதம்...
பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் பதவிப்பிரமானம் செய்துக்கொள்ள உள்ளார்.
அதுபோல் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையும் நாளைய தினம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை...
எஸ்.அஷ்ரப்கான்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரமான புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகரம் புதிய நவீன நகரமாகஅபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையினை நான்வழங்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (09) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்றஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வாக்குறுதியளித்தார்.
இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது. இதில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் திகாமடுல்லமாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்
இங்கு தொடர்ந்தும் றணில் விக்ரம சிங்ஹ உரையாற்றும்போது,
இலங்கையில் வாழும் எந்த நபருக்கும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றக்கூடிய உரிமை இருக்கவேண்டும் அதற்கு எவ்விதஅச்சுறுத்தலும் விடுக்க முடியாது.மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரையும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
இந்நாட்டு மக்களுக்கு தான் விரும்பிய மொழியைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆங்கிலத்தையும் பாவிக்க முடியும். அதேபோன்றுதான் விரும்பும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும். அதன் மூலம் இலங்கையர் என்ற உரித்துரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ்முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சினையையும் சிங்களவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினையையும் தீர்ப்போம்.
என்னால் 2005 ம் ஆண்டில் தன்னால் முடியாமல் போனதை 2015 ஆண்டில் செய்துகாட்டுவேன். எமது கைகள் களங்கமில்லாதவை. எனவே எமக்கு எந்த விடயத்தையும் சிறந்த முறையில் செய்து கொடுக்கும் தைரியம் இருக்கின்றது.
இந்த கல்முனை மக்களுக்கு நாம் சென்ற காலங்களில் வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். கல்முனையில் புதியநகர் உருவாக்கப்படும் அத்துடன் கல்முனை அபிவிருத்தி அதிகாரசபை உருவாக்கப்படும். கல்முனையை பாரிய நகரமாகமாற்றுவோம் தேவையான காணிகளைப் பெற்றுத்தருவோம்.
இன்று நாட்டில் பசி, பட்டினி, பொருட்களின் விலையேற்றம் என்று நாடே பெரும் அவஸ்தைப்பட்டதை நாம் குருகிய காலத்தில் இல்லாமல் செய்தோம். கல்முனை சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றப்படும். அதற்காக இப்பிராந்தியங்களில் தொழில்பேட்டைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். கல்முனை நவீன சந்தை, மாநகர சபை மற்றும் பல்வேறு விடயங்கள்எங்களால் கவனத்தில் கொள்ளப்படும்.
இந்நிலையில் அச்சமற்ற செழிப்பான வாழ்ககையை நோக்கிய எமது ஐக்கிய தெசஜயக“ கட்சியின் ஆட்சிப்பயணத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்றிணைந்து பங்குதாரர்களாக மாறுவோம். நல்லது செய்ய...
ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நேற்று கண்டி மாநகரில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இடம்பெற்றது . இதில் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல , ரவூப் ஹக்கீம் ,...
ஆகஸ்ட் 17ற்குப் பின்னர் உருவாரும் புதிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தமிழர், சிங்களவர் என பிரிந்து ஒருவரையொருவர்...
அஹமட் இர்ஷாத் புகாரி
வீடியோ அசாத்சாலியின் ஊடகவியலாளர் சந்திப்பு
இந்த நாட்டில் மஹிந்த ராஜபக்ஸ்சவின் அரசாங்கத்தினை கடுமையான முறையில் விமர்சித்தும் தாக்கியும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து வந்த மூன்னாள் நீதி அரசர் சரத் என் சில்வா...