ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் : மஹிந்த !

6a9161a8bc82d8b2077be05f9063b90b88d662c0205919bdc66ae8554cff598a

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரைக்கு ஓகஸ்ட் 17ஆம் திகதி பதில் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிகள் கட்சிகளின் அவசர கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது ஆரம்பமானது.

அக்கூட்டத்துக்கு வருகைதந்தபோது அங்கு குழுமியிந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தலில் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை அதுதொடர்பில் ஊடகவியலாளர் கேட்டபோது, அதுதொடர்பில் ஓகஸ்ட் 17ஆம் திகதி பார்ப்போம் என்றார்.மேலும் இந்த கூட்டத்திற்கு கட்சித்தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால அவர்கள் சமுகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற கூட்டத்தின் படங்கள்.

35f0c0fc2b1d48d5eb7ae1dcb7ea6c8e9d5d136fbb835e0182032665dd5e9f58 0027bd7de07a437dd3d9953b4febf04235c8382c92fb35387a5634c8208e82f0 23da295dd693425fcaf85899dc64b7c3e6408ad19aa423c54e99e0ef69164f0184ddc4d526d610ceb523718f4be6361253484e4f0457ad2b59532caa86b0412c ac287ceed83306d2046c2fbaa5bcc5cae813674e392eccabcf925888c7fade8f b47d7b3867850447663cf51a511c23287855d0417cae12635010865c89c846f1நன்றி  lanka deepa