ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் இரத்த தான முகாம்!

1_Fotor

எம்.வை.அமீர் 

 பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டுவரும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மாத்தினர் ஒன்றிணைந்து பாரிய இரத்த தான முகாம் ஒன்றை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் 2015-04-18 ல் ஏற்பாடு செய்திருந்தனர்.

“உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்” எனும் தலைப்பில் மனித நேயத்தை வார்த்தைகளில் மட்டுமின்றி இரத்த தானத்திலும் வெளிப்படுத்துவோம்! இன.மத,நிற,மொழி மற்றும் பிரதேச வேறுபாடுகளைத்தாண்டி மனித நேயத்தைக் காக்க களத்தில் இறங்கி உதிரம் கொடுக்க வாலிபர்கள் பெண்கள் உட்பட அநேகர் அணிதிரண்டனர்.

இரத்தங்களை பெறுவதற்காக தேசிய இரத்த வங்கி, பொது வைத்தியசாலை அம்பாறை, மட்டக்களப்பு பயிற்சி வைத்தியசாலை,அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசால,கல்முனை வடக்கு வைத்தியசாலை மற்றும் பொத்துவில், மகோயா வைத்தியசாலைகள் சார்பில் வைதியர்கள் அடங்கிய குழுக்கள் வருகைதந்து இரத்தங்களை சேகரித்தனர்.

சுமார் ஆயிரம் பேரிடம் இரத்தங்களை பெறும் நோக்கில்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஜம்மாத்தினர் மும்முரமாக தங்களது பிரச்சாரப்பணிகளை முடுக்கிவிட்டிருந்ததும் அதிகமானோர் தங்களது உத்திரங்களை கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

2_Fotor aaaaaaaa_Fotor bbbbbbbbbbb_Fotor