பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தியது !

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.


இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று  தம்புள்ளையில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப்பெற்றது.

217391

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சந்திமல் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் மெத்தியுஸ் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் மொஹமட் ஹாபீஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 256 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி மொஹமட் ஹாபீஸின் சதத்தின் உதவியுடன் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

பாகித்தான் அணி சார்பாக ஹாபீஸ் 106 ஓட்டங்களையும் மாலிக்  55 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

Pakistan cricketer Mohammad Hafeez touches the ground after he scored a century (100 runs) during the first One Day International (ODI) match between Sri Lanka and Pakistan at the Rangiri Dambulla International Cricket stadium in Dambulla, some 150 kms north of Colombo on July 11, 2015.  AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானின் மொஹமட் ஹாபீஸ் இப் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி பல்லேகலயில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.