துமிந்த சில்வா தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையவில்லை : பொலிஸ் தலைமையகம் !

 r_duminda_silva

 

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணை இதுவரை நிறைவடையவில்லை என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.

துமிந்த சில்வா தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிக்கையொன்றின் மூலம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, துமிந்த சில்வா மற்றும் வெலே சுதா தொடர்பிலான விசாரணைகள் குறித்து தேசிய நிறைவேற்று சபை முன்னிலையில் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித்த ஜயசுந்தர உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.