சர்வதேச பொலிசாருக்கு வீசா வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜோன் !

John Amaratunga 3_CI   சர்வதேச பொலிஸார் (இன்டெர் போல் )எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு வருகை தருவதற்கு கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது அமைதி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸார் நாட்டிற்கு வருகைதர வேண்டிய தேவை ஏற்படும் பட்சத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் சிலரின் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.