‘அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும்’

Maithri3அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை  அடைய முடியாது என்றும் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பண்பும் ஒழுக்கமும் நிறைந்த பிரசைகள் நாட்டின் அபிவிருத்திக்கு அத்தியாவசிய காரணியாகும் என்றார்.

கொழும்பு-03,  கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார்  மகளிர் மகா வித்தியாலயத்தின்  75ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

இற்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னர் புனித அந்தோனியார் மகளிர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கொழும்பு நகரம், ஒரு நாடு என்ற வகையில் இலங்கையிலும் உலகத்திலும் இருந்த நிலையிலிருந்து இன்று தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் புரட்சிகரமான மாற்றத்தை அடைந்துள்ளது.

ஆனால், அதற்கு இணையான வேகத்தில் மனிதர்களின் ஒழுக்கமும் பண்பும் அபிவிருத்தி அடைந்துள்ளதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் சட்டத்தரணி ஜோன் அமரதுங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.