குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானம்

 

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அடுத்த வாரம் முதல் 2 ஆயிரம் ரூபாவை வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவாக வழங்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.