ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரு வாரத்திற்கு நாட்டை மூடுமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின்  மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில்  கொரோனா வைரஸ் பரவலானது நாடு முழுவதும்  வைரஸ் பிறழ்வுகளுடன் ஒரு பேரழிவு சூழ்நிலையை கொண்டு வந்துள்ளது என  மகாநாயக்க   தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாரத்திற்கு நாடு பூட்டப்பட்டிருக்கும் போது மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளில் கவனம் செலுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.