எதிர்வரும் திங்கட் கிழமை(08.02.2021) திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் திங்கட் கிழமை(08.02.2021) திகதி முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும். புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் 3 மாத காலத்துக்கு நிலையாக பேணப்படும். இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

 

 

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க  விசேட கண்காணிப்பு நடவடிக்கை நாடு தழுவிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நுகர்வோர் லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும். தேசிய உற்பத்திகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளமை தற்போதைய விலை குறைப்புக்கான பிரதான காரணியாக உள்ளது.

தனியார் தேசிய உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு ஏற்றுமதியாளர்களுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்துக்கமைய,

சிவப்பு அரிசி ஒரு கிலோகிராம் 93 ரூபா

வெள்ளை அரிசி ஒரு கிலோ 93 ரூபா

வெள்ளை நாடு அரிசி ஒரு கிலோ 96 ரூபா

சம்பா ஒரு கிலோ 99 ரூபா

கீரி சம்பா ஒரு கிலோகிராம் 125 ரூபா

கோதுமை மா ஒரு கிலோகிராம் 84 ரூபா

வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் 99  ரூபா

சிவப்பு சீனி ஒரு கிலோகிராம்125 ரூபா

தேயிலை தூள்  100கிராம் பெக்கட் 95 ரூபா 

சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 165 ரூபா

பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபா

உருளைக்கிழங்கு (தேசிய உற்பத்தி) ஒரு கிலோகிராம் 180 ரூபா

உருளைக்கிழங்கு (பாக்கிஸ்தான்) ஒரு கிலோகிராம் 140 ரூபா

கடலை ஒரு கிலோகிராம் 175 ரூபா

உலர் மிளகாய் ஒரு கிலோகிராம் 495 ரூபா

டின் மீன் 425 கிராம் 220 ரூபா

டின்மீன்(இறக்குமதி)265 ரூபா

நெத்திலி 1கிலோகிராம் 575 ரூபா

கோழியிறைச்சி ஒரு கிலோகிராம் 400 ரூபா

உப்பு  ஒரு கிலோகிராம் 43 ரூபா

பால்மா 400 கிராம் 355 ரூபா

சோயா எண்ணெய் 500 மி.லீ.310 ரூபா

ஆடை கழுவும் சவர்காரம் 115 கிராம் 43 ரூபா

பார் சவர்காரம் 650 கிராம் 260 ரூபா

வாசனை சவர்காரம் 100 கிராம் 56 ரூபா  

பற்பசை 250 ரூபா 

முகக்கவசம் 14  ரூபாவாகவும் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இவ்விலையின் அடிப்படையில்  சதோச  விற்பனை நிலையங்களில்  நுகர்வோர் 27 அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை ஒரே தடவையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலைக்குறைப்பினை 3 மாத காலத்துக்கு பிறகும் அமுல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.