தமது ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலைகள் அமைக்கப்படவில்லை

கடந்த அரசாங்கம் ஒரு சிறைச்சாலையைக் கூட நிர்மானிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போது அவர் அதற்கு பதிலளிக்கும் வகையில் இதனைத் தெரிவித்திருந்தார்.

இதன்போது, தமது நல்லாட்சி அரசாங்கம் மஹாத்மா காந்தி வழியை பின்பற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு பாடசாலையை நிர்மானிக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுவதாக மஹாத்மா காந்தி கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் தமது அரசாங்கம் சிறைச்சாலைகளை நிர்மானிப்பதற்கு பதிலாக அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை என்ற எண்ணக்கருவிற்கு அமைய பாடசாலைகளை நிர்மானிப்பதில் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதனை ஒப்புக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.