பா. உ. ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1603173840525"}

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த மனு இன்று (20) குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருண ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் சார்ப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, மனுதாரரை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்க சட்டமா அதிபருக்கு அதிகாரம் இல்லை என நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தன்னுடைய கட்சிக்காரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள காரணத்தால் குறித்த மனுவை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதா இல்லையா என தனக்கு இதுவரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த மனு மீதான விசாரணையை நவம்பவர் 6 ஆம் திகதி வரையில் ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் மனுதாரர் சார்பான உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.