ருவான் விஜேவர்தன தனக்கு கீழ் செயற்படுவது பொருத்தமானதாக அமையாது-பதவி விலகியுள்ள அர்ஜூன ரணதுங்க

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

 

இது தொடர்பான அவரது இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ருவான் விஜேவர்தன, தனக்கு கீழ் செயற்படுவது பொருத்தமானதாக அமையாது என இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார்.