20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அறிக்கை சபாநாயகரிடம்….

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தம் தொடர்பான நீதிமன்றத்தின் அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறிக்கை தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் அறிவித்துள்ளார்.