இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டொனாட்ல் ட்ரம்ப் மிகுந்த பாதுகாப்புடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுவதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த கடினமான காலத்தில் இலங்கை மக்களின் பிராத்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.