தனக்காகா இல்லாமல் பிரருக்காக வாழும் தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம் – தேசிய காங்கிரஸில் மீண்டும் இணைந்து கொண்டார் அமீர் (TA)

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் A அமீர் (TA ) அவர்கள் மீண்டும் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார் .
சம்மாந்துறையில் இந்நிகழ்வு இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ALM .அதாஉல்லா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான SMM .இஸ்மாயில் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமாகிய SM சபீஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர் .

இந் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் A அமீர் (TA ) அவர்கள் ,

தனக்காகா இல்லாமல் பிரருக்காக வாழும் தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம். இதைவிட நல்லதோர் தலைமை இருக்குமோ என எண்ணி நாங்கள் மாற்றுத் தலைமைகளிடம் சென்றிருந்தோம்.அங்கே பாழடைந்து இருள்சூழ்ந்த குகைக்குள் வெறியோடு இருக்கும் புலிகளைப்போல தலைவர்கள் காட்சியளித்தனர்.
அவர்கள் எம்மக்களை வைத்து இனவாதம் பேசி வியாபாரம் செய்கின்றனர். இதனைப்பார்த்தும் அங்கே என்னால் இருக்கமுடியுமா?அதனால்தான் எந்தலைவனிடமே நாங்கள் வந்துசேர்ந்துவிட்டோம் என்று கூறினார்.