அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம் – பிரதமர் மகிந்த ராஜபக்ச

(அஸ்ரப் ஏ சமத்)

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அன்றும் என்னோடு இருந்த முஸ்லிம்கள் இன்றும் என்னோடுதான் இருக்கிறார்கள் . அவர்களுக்கு எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் அவர்கள் என்னுடன் தான் இருக்கின்றனர் . ஆனால் தொடர்ந்து புரியாணி வட்டிலப்பம் கிடைத்து வந்தது போகப் போக அது கிடைக்காமல் குறைந்துவிடுமோ என்றுதான் என்னத் தேன்றுகின்றது.

மேற்கண்டவாறு தெகிவளை சகரான் மண்டபத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் , வேட்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில் ,

அன்று றிசாத் பதியுத்தீன் சொப்பிங் பேக்குடன் வடக்கில் இருந்து வந்தவர் இன்று லொறியுடன் செல்லும் அளவுக்கு வட கிழக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித்துக் கொடுத்தோம். . அன்று மூதூர் வாழ்ந்த முஸ்லிம் மக்களை விடுதலைப்புலிகள் 2மணித்தியாலய்ங்களுக்குள் விரட்டி கந்தளாய் துரத்தி விட்டார்கள் . அன்று நாங்கள் முஸ்லிம்களிடம் சொன்னோம். ஒரு கிழமைக்குள் உங்களை மீள மூதூருக்கு குடியமர்த்துவோம் அதேமாதிரி புலிப் .பயங்கரவாதிகளை துரத்தி மீளவும் மூதுாரில் முஸ்லிம்களை குடியமர்த்தினோம். இப்பொழுது யாழ்ப்பாணம் தொட்டு ஹம்பாந்தோட்டை வரையிலான எந்தப் பிரதேசங்களுக்கும் மக்கள் எங்கும் அச்சமின்றி சென்று வரக்கூடிய சுழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தினோம். நாங்கள் ஒருபோதும் தமிழ் மக்களுடன் சன்டையிடவில்லை. புலிப்பயங்கரவாதிகளுடன சன்டையிட்டு பயங்கரவாதத்தினை அழித்து நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்தினோம்.

கடந்த கால நல்லாட்சியில் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. ஜனாதிபதி ஒரு பக்கம் இழுத்தடிப்பு பிரதமர் ரணில் ஒரு பக்கமென இழுத்தடிப்புக்கள் தான் நடைபெற்றன. ஆனால் நாட்டில் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. இந்த நாட்டில் கோட்டாபாய ராஜபக்ச அவர்களை வெற்றிவாகை கூடிய கட்சியில் இருந்துதான் என்னை பிரதமராகக் கொண்ட அரசாங்கம் ஏற்படுதல் வேண்டும் .

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி தலைமையில் உலகில் எங்குமில்லாதவாறு பாதுகாப்புப்படையினார் பொலிஸார் மற்றும் சுகாதார அமைச்சும் இனைந்து தான் இந்த கொடிய கோரோனா பயங்கர தொற்று நோயை அவர் வெற்றிகண்டார் . அது ஏனைய நாடுகளுக்கு ஒரு முன் உதாரணமாக உள்ளது. அந்த எடுபிடியில் தான் முஸ்லிம்களது கோரோனா நோயளிகள் இறந்தவா்களின் உடலை புதைப்பதா அல்லது பற்றவைப்பதா என்ற பிரச்சினை எழுந்தது. இவ்விடயத்தினை ரவுக் கக்கீம் தான் சாடிப் பேசினார் . அதன் பின்னர் அலி சப்றி தலைமையில் சில முஸ்லிம் குழு வொன்று இது பற்றி என்னைச் சந்தித்து. பேசினாா்கள் அதனை நான் சுகாதார அமைச்சார் பவித்திரா வண்னியராச்சி மற்றும் வைத்திய அதிகாரிகள் விஞ்ஞானிகள் கூட்டி அவர்களது தகவல் அறிக்கையின் படியே அது நடைபெற்றது. அவர்கள் பற்றவைப்பதனையே சொல்லியிருந்தார்கள் . அதனை மீறி அரசியல் ரீதியாக நாங்கள் அவ்விடயத்தில் கையடிக்கவில்லை. . கோரோனா ப்ற்றி மிகவும் கட்டுபாடாக .இருந்தமையில் தான் நாம் தற்போது அந் நோயில் இருந்து தப்பியுள்ளோம். நேற்று முன்தினம் காலிமுகத்திடலில் சனங்கள் பழைய முறைப்படி நெறிசலாக நிறம்பி வழிந்திருந்தார்கள் . அவைகள் மீள சனக் கூடுவதை தவிர்ந்து கொள்வது நல்லது.

இந்த நாட்டினை ஜனாதிபதியின் 5 வருடங்களுக்குள் நல்லதொரு சமுதாயத்தினை கட்டியெழுப்பி சகலரும் வாழக்கூடிய நிலைமைக்கு கொண்டுவருதல் வேண்டும். ஆகவே தான் நமது எதிர்கால சிறார்களுக்கு சிறந்த பிரஜைகளாக வருவதற்கு வழிவகுத்தல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினை விட கோட்டபாய ராஜபக்ச மிகவும் கடுமையானாவர் . அவர் இந்த நாட்டினை சிறந்த நாடாக கொண்டு வருவார் . என நம்புகின்றோம். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தேசிய பட்டியலில் உள்ளார் . அவர் எம்முடனை இனைந்து நாட்டுக்காக சேவையாற்றுவார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர் கள் உரையாற்றினார் .

முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அலி சப்றி, சுசில் பிரேம் ஜயந்த , காமினி லெக்குகே ,பேராசிரியர் ஜீ.எல் பீறிஸ் ஆகியோறும் இங்கு உரைய்ற்றினார்கள் அத்துடன் வடகிழக்கு உட்பட பல்வேறு பிரதேச முஸ்லிம் உறுப்பினர்கள் தமது பிரச்சினைகளை அலி சப்றியுடன் கலந்துரையாடினார் .