களுத்துறை மாநகர சபையின் மேயர் அமீர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் ஏ டி நிலந்த ஆகியோர் கைது

arrest

களுத்துறை மாநகர சபையின் மேயர் நசீர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பகுதியில் மூடப்பட்டிருந்த சிறைச்சாலையொன்றின் பூட்டினை உடைத்து உள்நுழைந்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்,அத்துடன் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ் ஏ டி நிலந்தவும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 23 ஆம் திகதி குறித்த 2 பேர் உட்பட 12 பேர் மூடப்பட்டிருந்த மைதானத்திற்குள் பிரவேசித்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.இதனையடுத்டு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

arrest