அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஜனாஷா எரிப்பிற்கெதிராக தீர்மானம் நிறைவேற்றம்

 

இன்று அக்கரைப்பற்று மாநகர சபை அமர்வு மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .

 

இதன் போது கொரனோ தாக்கத்தினால் சிகிச்சை பலனின்றி வபாத்தாகும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை சபையில் முன் வைத்தார்.

 

முதல்வரின் இந்தக்கோரிக்கை மாநகர சபையின் உறுப்பினர்களால் ஏகமனதாகநிறைவேற்றப்பட்டது.

 

  நாட்டின் ஜனாதிபதி பிரதமர் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு இந்தத் தீர்மானம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.