பாலமுனைப் பாடசாலைக்கு முதலமைச்சரினால் புதிய கட்டிடம்..!

 

முதலமைச்சர் ஊடகப்பிரிவு 

காத்தான்குடி பாலமுனை அஷ்றப் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா பாடசாலை அதிபர் கே.எல்.எம்.ஹைறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

இப்பாடசாலையின் நீண்டகாலத்தேவையாக இருந்து வரும் கட்டிடத்தேவையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டதன் பயனாக இப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றினை அமைக்க முதற்கட்டமாக  2.7மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், பேராசிரியர் ராஜேஸ்வரன். கல்விப்பணிப்பாளர் சேகு அலி காத்தான்குடி நகரசபை முன்னாள் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஷா மற்றும் பலரும் கலந்து  கொண்டனர்.
DSC_2547_Fotor DSC_2606_Fotor DSC_2574_Fotor