உண்மையில் அதாஉல்லா துரோகியா ? பற்றாளனா? விடை தாரும் ஹரிஸ் எம்பியே

 

காவு கொள்ளப்படவிருந்த கல்முனையை உங்கள் அழைப்பையேற்று சடுதியாய் ஓடி வந்து கொமிஷன் போடச் சொன்னானே அந்த அதாஉல்லா துரோகியா பற்றாளனா ?
விடை தாரும் ஹரிஸ் எம்பியே…

சாய்ந்தமருது மக்கள் மஹிந்தையை, பஷிலை, நாமலை அழைத்து வந்து மாபெரும் கூட்டம் போட்டு தங்களுக்கு சபை வேண்டி வேண்டுகோள் விடுத்தல்லவா இந்த சபையை பெற்றார்கள் இது பொய்யா மெய்யா விடை தாரும் ஹரிஸ் எம்பியே…

 

சந்தர்ப்பம் பார்த்து கல்முனையை தாரைவார்க்கும் திட்டத்தோடு கருனா பாதுங்குகையில் உன் அழைப்பையேற்று எம் கல்முனைக்கு கமிஷன் போட வைத்த அதா துரோகியா ? பற்றாளனா ?
விடை தாரும் ஹரிஸ் எம்பியே…

நான் அதாவின் ஆதரவாளனல்ல ஆனால் உண்மைநிலை தானரிந்தும் உறங்க முடியாமல் தவிக்கின்றேன் உடன் விடை தாரும் என் ஊர் தலைவா ஹரிஸ் எம்பியே…

மனிதனின் உள்ளம் அல்லாஹ்வின் அர்ஸ் என்பார் அங்கு அதா அழுகின்றான் அதற்கு உண்மை விடை தாரும் ஊர் தலைவா ஹரிஸ் எம்பியே…

உதவி நமக்கு செய்ய வந்து உபத்திரோக பெயர் வாங்கி உறங்கமின்றி தாவிக்கின்றான் அதா உண்மையை எடுத்தியம்பு ஊர் தலைவா ஹரிஸ் எம்பியே…

RDA பிராந்திய காரியாலயத்தை எடுத்துச் சென்று விட்டானன்று அல்பிரட் துரையப்பாவென்று அன்று நீ பட்டமிட்டாய் இன்று முனையிலிருந்து மருதூர் போயும்கூட மெளனமான
மர்மமென்ன மண்ணின் மைந்தா ஹரிஸ் எம்பியே…

உண்மை நிலை நீயறிந்தும் ஊமையனாய் இருந்தியானால் உதவ இனி யார் வருவார் உணர்ந்தியம்பு ஹரிஸ் எம்பியே…

ஆட்சி அதிகாரமெல்லாம் ஆண்டவன் விதிப்படியே அன்று நடந்த கதையென்ன அறியத் தாரும் ஹரிஸ் எம்பியே…

உயிர் கொல்லி எய்ஸ்சாகி
அதன் பின்பு கிட்னியாகி கொரானாவாய் வந்திருக்கி
வாழ்க்கை சொற்ப காலமையா யாருக்கும் அஞ்சிடாமல் விடை கூறும் ஹரிஸ் எம்பியே…

அதாஉல்லா துரோகம் செய்தான் என்று நீ சொன்னியானால் முதல் பொம்மை நானேறிப்பேன் முடிவு தா ஹரிஸ் எம்பியே…

மண்னை நாசம் செய்திட்ட மதியிழந்த ஹக்கீமாலே மறு ஊரும் நாசமாகிடாமல் விண்டுவிடு ரகசியத்தை வினயமாய் கேட்கின்றேன்…

அறியாத மக்களின்று அறிய ஆர்வம் கொள்வதனால் அறிந்த நீர் சொல்லுமையா
அன்பனே ஹரிஸ் எம்பியே…

விழுங்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல்
விம்மி நீயும் மடியாமல் வீறு கொண்டு விடை பகரும் விடை தெரிந்த ஹரிஸ் எம்பியே…

ஷா மஜிட்