ஸ்ரீ .சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை இன்று காலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. 

நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த தீர்மானத்திற்கமைய சில நிபந்தனைகளை உள்ளடக்கி இன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டுக்கான முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன.