மகிந்தவுக்கு ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையில் மைத்திரி !

 

images (1)ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகள் சிலவற்றில் உடனடியான மாற்றங்களைச் செய்ய அந்தக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்குவைத்து குருநாகல், நுவரெலியா, அநுராதபுரம் ஆகிய மாவட்ட அமைப்பாளர்கள் பதவியில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரபல ஆதரவாளர்கள் அமைப்பாளர்களாக இருக்கும் தொகுதிகளில் அமைப்பாளர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஆதரவானவர்களை நியமிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.

அடுத்த வாரத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையைக் கூட்டி இந்த நியமனங்கள் தொடர்பான அனுமதிகளைப் பெறத் திட்டமிட்டுள்ளது.