ரணில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்குறுதிகளை வழங்கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார் – அதாஉல்லா

முஸ்லிம் மக்­களை ஏமாற்றி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய  காலம் தற்­போது மாற்­ற­ம­டைந்து விட்­டது. பல­மான தலை­மை­யி­லான ஆட்­சி­யை ஏற்­ப­டுத்த   நாட்டு மக்கள் அனை­வரும்  இன, மத பேத­மின்றி  முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்­கு­வார்கள்  என  முஸ்லிம் தேசிய முன்­ன­ணியின்  தலைவர் ஏ.எல்.எம். அதா­வுல்லா தெரி­வித்தார்.

அநு­ரா­த­புரம் நகரில் நேற்று  இடம்பெற்ற பொது­ஜன பெர­மு­னவின் கன்னித் தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில்  கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க   தமிழ்,  முஸ்லிம் மக்­க­ளுக்கு போலி­யான வாக்­கு­று­தி­களை  வழங்­கியே ஆட்­சியைக் கைப்­பற்­றினார். கடந்த  ஐந்து ஆண்­டு­க­ளாக   நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நிர்­வா­கத்தில் தமிழ், -முஸ்லிம் மக்கள்  பாரிய நெருக்­க­டி­களை   எதிர்­கொண்­டுள்­ளார்கள். ஒரு கட்­டத்தில் முஸ்லிம் மக்­களின் வாழ்க்கை  பாரிய அச்­சு­றுத்­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது.

போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்கி  ஆட்­சி­யைக்  கைப்­பற்­றிய  பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க  மீண்டும் போலி­யான வாக்­கு­று­தி­களை வழங்க ஆரம்­பித்து விட்டார். இம்­முறை  முஸ்லிம் மக்­களை ஏமாற்றி  வாக்­கு­களைப் பெற முடி­யாது.  பல­மான தலை­மைத்­து­வத்­தி­லான  அர­சாங்­கத்தை   உரு­வாக்க இன்று  நாட்டு மக்கள் இன, மத பேத­மின்றி  ஒன்­று­பட்டு   உள்­ளார்கள்.

பாரிய போராட்­டத்தின் மத்­தி­யிலே அனைத்து இனங்­களின் பாது­காப்பும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. தேசிய பாது­காப்­பை  நல்­லாட்சி அர­சாங்கம் பல­வீ­னப்­ப­டுத்தி   பாரிய   அச்சுறுத்தலை  ஏற்படுத்தியது.   நாடு எதிர்கொண்டுள்ள    பின்னடைவிலிருந்து  மீள வேண்டும். அதற்காக  அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.