கோத்தபாய ராஜபக்ச இலங்கைப் பிரஜை தான் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்

கோட்டபாய ராஜபக்சவின் இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவர் இலங்கை பிரஜை தான் என்பதை உறுதி செய்தது .அதேநேரம் மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் ஏகமனதாக இந்த முடிவை அறிவித்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

Thamilan