செயற்குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்று ஜனாதிபதி வேட்பாளாரானர் சஜித் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச கட்சியின் செயற்குழுவினால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3.30 மணி முதல் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் – கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேர்தலில் முன்வைக்கப்பட வேண்டிய கொள்கைகளை இங்கு பிரதமர் ரணில் விளக்கினார்.அந்த கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு அனைவரும் கூட்டாக செயற்பட வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சி பிளவுபடாமல் இருக்க இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் ரணில் இங்கு தெரிவித்தார்.

 

thanks tamilan