விஜயதாச ராஜபக்ச உட்பட ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்திய UNP

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேரை கட்சியில் இருந்து இடைநிறுத்தி அறிவித்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.

சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச,ஆனந்த அளுத்கமகே,அசோக்க பிரியந்த,எஸ்.பி.நாவின்ன,துனேஷ் கன்கந்த ஆகியோரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.அசோக்க தேசியப்பட்டியலில் நியமிக்கப்பட்ட எம் பி யாவார்.

சஜித் ஆதரவு எம் பிக்கள் அதிரடியாக செயற்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஒரு மறைமுக எச்சரிக்கை விடுக்கவே இந்த நடவடிக்கையை கட்சித் தலைமை எடுத்துள்ளதாக ஐ தே க தகவல்கள் தெரிவித்தன.

 

thanks tamilan