என் மீது பொய்யுரைக்கும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும் – றிசாட் நாடாளுமன்றில் தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரிஷார்ட் பதியுதீன் எம் பி இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ,

 

எனது தாயாரின் சகோதரர் ஒருவரின் உறவினர் தெமட்டகொடையில் நடந்த வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் என விமல் வீரவன்ச இங்கு குற்றஞ்சாட்டியுள்ளார். எனது தாயாருக்கு சகோதரர்கள் கிடையாது.

தொடர்ந்து பொய்களை கூறிவரும் விமல் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த முறைப்பாட்டையும் இதுவரை செய்யவில்லை.அவரின் பொய் அளவில்லாமல் போய்க் கொண்டுள்ளது.என் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறேன்.இப்படி பொய் சொல்லும் விமலின் மூளையை பரிசோதனை செய்யவேண்டுமென நான் கோரிக்கை விடுக்கிறேன்.

 

Thanks Tamilan