ஓமானுக்கு சென்றிருந்த அமைச்சர் குழு நாடு திரும்பியுள்ளனர்

ஊடகப்பிரிவு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான்சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலைநாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன்ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில்அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவீர ஆகியோரும்இணைந்திருந்தனர். கடந்த 05ஆம், 06ஆம் திகதிகளில்ஓமானில் இடம்பெற்ற பல்வேறு உத்தியோகபூர்வநிகழ்வுகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் அமைச்சர் ரிஷாத்பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்கள் குழு ஓமான்நாட்டில் கடந்த 05ஆம் திகதி  சோஹார் சுதந்திர வர்த்தகவலயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைமுகத்தைபார்வையிட்டிருந்ததுடன் அதே நாள் லிவா பிளாஸ்டிக்கைத்தொழில் வலயத்தையும் பார்வையிட்டிருந்தனர்.

பின்னர், அடுத்த நாள் 06ஆம் திகதி அமைச்சர்கள் குழுவினர்ஓமானிய பெற்றோலிய மற்றும் எரிவாயு அமைச்சர் அலி மசூட்அல் சுனைதி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்முல்ஹாம் அல்ஜாப், அரச பொது ஒதுக்கீடு நிதியத்தின்பிரதான முதலீட்டு அதிகாரி டாக்டர். முகம்மட் ரும்கி, ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். எண்ணெய்சுத்திகரிப்பு தொடர்பாகவும் அரச வருமானங்கள் தொடர்பிலும்இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளும் பரஸ்பர அனுபவங்களைபகிர்ந்துகொண்டனர்.

ஓமானிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அலி மசூட்அல் சுனைதியுடனான சந்திப்பின் போது இலங்கைக்கும்ஓமானுக்கு இடையிலான ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டுஒப்பந்தம் தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்கள்குறித்து இறுதிக் கட்ட பேச்சுக்களை அமைச்சர் ரிஷாத்பதியுதீன் நடத்தினார். இந்த சந்திப்பின் போது, கூட்டுஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான முன்மொழிவுகளைமுன்னெடுப்பது தொடர்பிலும் ஓமானிய அமைச்சர்வலியுறுத்தினார். அத்துடன் இரண்டு நாடுகளுக்கும்இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்தான சட்டவரைபுகளும் ஆலோசிக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தஓமானிய பெற்றோலிய மற்றும் எரிவாயு அமைச்சர் டாக்டர். முகம்மட். முகம்மட் ரும்கி கொழும்பில் மார்ச் மாதம் 23ஆம்திகதி இலங்கை அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பின்பின்னரேயே, அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், மலிக்சமரவீர, கபீர் காசீம் ஆகியோர் ஓமானுக்கு சென்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.