புதிய பிரதம நீதியரசராகிறார் ஜயந்த ஜயசூரிய


இன்று கூடிய அரசியலமைப்பு சபை தற்போதைய சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை புதிய பிரதம நீதியரசராக நியமிக்க ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.

 

 கடந்த காலத்தில் சட்டமா அதிபராக கடமையாற்றிய மொஹான் டி சில்வா பிரதம நீதியரசராக கடமையாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கத்து .