கதிரியக்கவியல் பிரிவு மற்றும் உள்ளக மேம்பாலத்தை திறந்து வைத்த இராஜாங்க அமைச்சர்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கதிரியக்கவியல் பிரிவு (Radiology Department)மற்றும்  உள்ளக மேம்பாலம்  போன்றவை மக்கள் பாவனைக்காக  இன்று (18) சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிமால் திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப். றஹ்மான்  தலைமையில்  இடம்பெற்ற  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார இராஜாங்க அமைச்சர்  பைசால் காசிம் கலந்து சிறப்பித்ததோடு வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும்  பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
[ஊடகப் பிரிவு]