ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்தமைக்கான காரணத்தை வெளியிட்ட ஐ.தே.க MP

ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமையவே கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.

 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.அரசாங்கத்தின் பிரதானி என்ற வகையில் கடந்த காலங்களில் ஜனாதிபதி நடந்துக்கொண்ட விதத்தை ஏற்றுக்கொளள் முடியாது. 

 ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோபம் நியாயமானது.எனினும் கட்சி எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள நேரிட்டது எனவும் ஹப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.