ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமையும் வாய்ப்பு இல்லை , அதுதான் வரலாறு – பசில்

 

இன்றைய செய்தியாளர் மாநாட்டில் பசில் ராஜபக்ச சொன்னவை ..

* நாங்கள் கூட்டணி அமைக்க யாரிடமும் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை…

* ஜனாதிபதி தேர்தலில் கூட்டணி அமையும் வாய்ப்பில்லை. அது தான் வரலாறு.

* ஜனாதிபதி வேட்பாளர் உரிய நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும்.கோட்டாபய முன்வந்து தனது விருப்பை சொன்னது போல போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* புதிய கொள்கைகளுடன் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ரீம் இருக்க வேண்டும்.தலைமை என்பதனை விட ரீமும் நல்ல ஒன்றாக இருக்க வேண்டும்.

* மக்கள் விரும்பும் வேட்பாளர் தான் எங்கள் தேர்வும் ..

* கூட்டணி தொடர்பில் நாங்கள் 14 ஆம் திகதி நடக்கும் சந்திப்பில் திறந்த மனதுடன் பேசுவோம்.கால எல்லை – நிபந்தனை இடமாட்டோம்.

* ஜனாதிபதி தேர்தலில் வடக்கும் கிழக்கு மாகாணங்கள் முக்கியத்துவமானவை.. அதை ஏற்கிறேன்..

* எமது நாடு இறைமையுள்ள நாடு. அந்த நாடுகளின் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும்.அதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம் நாங்கள் உலக நாடுகளுடனும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும். அதுவே யதார்த்தம்.

R.Sivaraja