ACMC மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

 அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர் முகம்மட் பாயிசின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் . இத் தாக்குதல் சம்பவத்தின் போது எவ்விதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை .

ஜன்னல் வழியாக வீட்டினுள் வீசப்பட்ட இக் குண்டுத்தாக்குதலினால் வீட்டில் காணப்பட்ட மின் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது .

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

கடந்த காலங்களிலும் முகம்மட் பாயிஸ் மீது இரண்டு முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .